மகத்: இன்று - அன்றாடம் அரங்கேறும் யாத்திரை - நூல் அறிமுகம்.
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் -30. நாள்: 30.09.2024. நூல்: மகத்: இன்று- அன்றாடம் அரங்கேறும் யாத்திரை அறிமுகம்: வெ.இராஜன் வெளியீடு: திருவள்ளுவர் பொத்தக இல்லம். விலை 65 ரூபாய். பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு ,தொழில், கல்வி ,சமூக உயர்வு, இழிவு இருப்பிடம் ஆகியவற்றை முழுமையாக நிர்ணயித்து அதன் மூலம் ஒரு மனிதன் தன் பிறப்பிலிருந்து, இறப்பு வரை தான் எந்த வகையிலும் சம்பந்தப்படாத ஒன்றினை சுமக்க வேண்டிய அல்லது அனுபவிக்க வேண்டிய வழிமுறைகளை உருவாக்கியது என்பது உலகத்திலேயே வேறு எங்கும் இல்லாத மிக மோசமான விஷம் போன்ற ஒரு தத்துவம். சாதிய சமுதாயத்தை இந்தியா உருவாக்கி உருப்பெற்று, ஆலமரமாக நிறுத்தியது. இதனைப் பல்வேறு தலைவர்கள், இயக்கங்கள் , கட்சிகள் ,அரசுகள் ஆகியவை தங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து சமத்துவ சமூகத்தை, அனைவரும் சமம் என்ற அடிப்படையில் அமைந்த ஒரு உயரிய சமூகத்தை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அந்த முயற்சியின் பிதாமகர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், கடந்த நூற்றாண்டின் இருபதுகளில் மகத் நகர் குளத்தில் தண்ணீர் எடுக்க...