Posts

Showing posts from February, 2025

நானும் ஒரு பெண்தானே! நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை நூல் அறிமுகம்: நூல்: நானும் ஒரு பெண்தானே! ஆசிரியர்: நூலகர் சி சரவணன்  பக்கம்: 206. விலை 200 பதிப்பு: பாரதி பதிப்பகம்  நூல் அறிமுகம்:  கூத்தப்பாடி மா.பழனி செயலாளர் தருமபுரி மாவட்டப் படைப்பாளர் - பதிப்பாளர் சங்கம் பேச : 96265 87770 நூலகர் சி. சரவணன் அவர்கள் எழுதி இருக்கும் நானும் ஒரு பெண்தானே! என்னும் இந்த நாவலை நான் வாசிக்கத் தொடங்கியது முதல், படித்து முடிக்கும் வரை அடுத்து என்னவாக இருக்கும்? என்னும் எதிர்பார்ப்பு எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. இது ஓர் அற்புதமான கதை. எளிய நடையில், நல்ல தமிழில், பிறமொழிச் சொற்கள் கலக்காமல் எழுதப்பட்டுள்ளது இந்த நூலின் சிறப்பு.  கதை நாயகன் சக்திவேல். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞன். கதை நாயகி உமா. சென்னையைச் சேர்ந்த படித்த இளம்பெண். இருவரும் கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் பணிபுரிகின்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே துறையில் பணிபுரிவதால் நெருங்கிப் பழகுகின்றனர். ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்ள மனதளவில் விரும்புகின்றனர். ஆனால், வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில்லை....