Smoke and Ashes - நூல் அறிமுகம்.
Smoke and Ashes Amitav Ghosh நூலனுபவம்: எனக்குத் தேநீர் அவ்வளவாகப் பிடிக்காது. சிறுவயதில் காப்பி குடித்து வளர்ந்தவன். இன்று யோசித்துப் பார்க்கையில், அதுவுமே, ஒரு அபத்தமான வழக்கமாகத்தான் தோன்றுகிறது. ஆனாலும், அது காலையில் தவிர்க்க முடியாத வழக்கமாக உள்ளது என்பது உண்மை. உலகின் பெரும்பான்மையான மக்களும், பெரும்பான்மை இந்தியர்களும் குடிப்பது தேநீர்தான். ஆனால், இந்த பயிர், இன்னொரு பயிருடன் இணைந்து, உலகை இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக ஆட்டிப் படைத்திருக்கிறது என்பதை அமிதாவ் கோஷ் சொல்கையில். ‘என்னைய்யா கத விடறார்’, னு தோன்றும். ஆனால், அதுதான் உண்மை என்கிறது அமிதாவ் கோஷின், ’Smoke and Ashes’, புத்தகம். அமிதாவ் கோஷ் உலக இலக்கியத்தில் மிக முக்கியமான ஆளுமை. இந்தியாவில், இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான, ‘ஞானபீட’, பரிசைப் பெற்றவர். இவரது Ibis Trilogy என அழைக்கப்படும், ‘Sea of Poppies’, ‘River of Smoke’ and ‘Flood of Fire’, என்னும் புகழ் பெற்ற நாவல் வரிசையை எழுதியவர். இந்த நாவல்களுக்காக அவர் செய்த ஆய்வுகளை, ஒரு வரலாற்றுக் குறிப்பாக ‘Smoke and Ashes’, என்னும் இந்தப் புத்தகத்த...