Posts

Showing posts from March, 2025

நேர்மை படும் பாடு - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை நூல் அறிமுகம்  நூல் தலைப்பு: நேர்மை படும் பாடு ஆசிரியர்: ஞான ராஜசேகரன்  வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ். நூல் அறிமுகம்: இ.தங்கமணி, ஆசிரியர் . ஞான ராஜசேகரன் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சி பணி அலுவலர், கலை இலக்கிய ஆர்வலர் ,திரைப்பட இயக்குனர் என பன்முகம் கொண்டவர். அவர் தனது அரசுப் பணி அனுபவங்களை விவரிக்கும் 32 சுவையான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்.  நூலின் தலைப்பே சொல்வது போல தனது பணிக்காலத்தில் இயன்றவரை நேர்மையாக கடமையை செய்தவர் ஞானசேகரன். அவ்வப்போது எதிர்கொண்ட சவால்களையும் நெருக்கடிகளையும் சுவைபட கூறி இருக்கிறார். அதே நேரத்தில் நேர்மை என்ற பெயரில் தேவையற்ற கெடுபிடிகளை செய்யும் மனிதாபிமானமற்ற அலுவலர்களின் செயல்பாடுகளையும் விமர்சிக்கிறார். கீழ்கண்ட வரிகளே நூலாசிரியரின் ஆளுமையை நிரூபிப்பதாக உள்ளது.   "ஐஏஎஸ் தந்த நேர்மை திமிரை வெளிகாட்டி அரசியல்வாதிகளுடன் ஆன உறவை நாசமாக்கிக் கொள்வதால் மக்களுக்கு நமக்கோ யாதொரு பலனும் இல்லை. என் சர்வீஸில் பலமுறை அரசியல் தலைவர்கள் சிபாரிசு செய்ய லிஸ்ட்டோடு என்னிடம் வந்திருக்கிறார்கள்.அவர்கள் எப்போதும் தொண்...

பாவை - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை நூல் அறிமுகம். நூல் தலைப்பு: பாவை.  நூலாசிரியர்: மு வரதராசனார்.  நூல் அறிமுகம்: நூலகர் சி சரவணன். ‘பாவை’ இது 1944ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு அற்புதமான புதினம். கதைச்சுருக்கம்:  ஒரு கிராமத்து மணியக்காரரின் மகன் பழனியப்பர். கல்லூரிப் படிப்பைப் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து இருக்கிறான். அதே கிராமத்தில் வேலுப்பிள்ளை என்பவரின் மகளான பாவையை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். பாவை, இவன் பள்ளியில் படிக்கும் பொழுது, அதேப் பள்ளியில் சிறுமியாக படித்தவள். பாவை பள்ளிக்குச் செல்லும்போது பழனியின்(பழனியப்பர்) தாயார் அவளை அழைத்து தலைவாரி பூச்சூடி அழகு பார்ப்பது வழக்கமாக இருந்தது. பழனியின் தாயாருக்கு பெண் குழந்தை இல்லாததால் அவ்வாறு செய்து மகிழ்ந்தார். அதனால், பாவை மருமகளாக வருவதை தன் தாயார் எதிர்க்க மாட்டார் என்று நம்புகிறான் பழனி. ஆனால், பழனியின் தந்தை மணியக்காரர் இந்த காதலுக்குஎதிர்ப்பு தெரிவிக்கிறார். தன் மகனுக்கு தன் ஜாதியில் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைப்பது என்று முடிவு செய்து மணமகள் தேடுகிறார். மணியகாரர் மற்றும் வேலுப்பிள்ளை குடும்பங்களுக்கு நல...

லவ் யூ சென்னை - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை நூல் அறிமுகம். நூல் தலைப்பு: லவ் யூ சென்னை  ஆசிரியர்: டாக்டர் கோ. ஒளி வண்ணன். பதிப்பு: எழிலினி பதிப்பகம். பக்கம்: 144 விலை: ரூ.300 நூல் அறிமுகம்: நூலகர் சி. சரவணன். எம்ராய்ட், எழிலினி பதிப்பக உரிமையாளர் திரு. கோ.ஒளிவண்ணன் அவர்கள் எழுதிய குறுநாவல் இது. இது இந்த ஆண்டு சென்னை புத்தக திருவிழாவில் வெளியிடப்பட்டது. இந்த நூலின் சிறப்பு சமகாலத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள கதையாகும். குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல நூறு உயிர்கள் காணாமல் போனதும், லட்சக்கணக்கான வாகனங்கள் பழுதானதும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் நாசமானதும் அனைவரும் அறிவோம். இந்த அவலத்தை நம் கண்ணுக்கு படம் பிடித்து காட்டுகிறார். அரசு நிர்வாக செயல்படாமல், முடங்கி இருந்தால் இது போன்ற சீரழிவுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.   இந்த பேரழிவில் தன் பெற்றோர்களை இழந்த ஒரு மாணவியின் கண்ணீர் கதையை விவரிக்கிறார் நூலாசிரியர். கோவையில் படித்து வரும் அந்த மாணவி, தன் தந்தையிடம...