நரிப்பல் - நூல் அறிமுகம்.
நூல்: நரிப்பல். ஆசிரியர்: வெ. இறையன்பு. நியு செஞ்சுரி புக் ஹவுஸ். முதல் பதிப்பு: 2009. நூல் அறிமுகம்: நூலகர் சி. சரவணன். இந்த நூலில் வே. இறையன்பு எழுதியுள்ள 15 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் 5, 6 பக்கங்கள் உள்ளன. பெரும்பாலான கதைகள், இவருடைய வாழ்க்கையில், தான் கண்டு களித்த, வாழ்க்கையில் நடைபெற்ற, சம்பவங்களை அடிப்படையாக எழுதியுள்ளார். ‘விசுவாசிகள்’ என்னும் சிறுகதையில் தான் உயர் அதிகாரியாக இருந்தபோது ஆக்கிரமிப்புகளை வெளியேற்றுவது தொடர்பான சிக்கல்களுக்கு எப்படி தீர்வு காணப்பட்டது என்பதைப் பற்றி எழுதியுள்ளார். ‘செருப்பு விற்பவர்’ என்னும் சிறுகதையில் செருப்பு விற்பனை செய்யும் தொழிலாளியின் பணி நிலையை குறைத்து மதிப்பிடும் தன் மனைவி திருந்துவது எப்படி என்று விளக்குகிறது. ‘எல்லாம் அவன் செயல்’ என்னும் சிறுகதையில் குடும்பத் தலைவி சொந்த வீடு வாங்கவும், குழந்தைகளின் படிப்பு முன்னேற்றத்திற்காகவும் சிக்கனமாக இருந்து குடும்பம் நடத்துகிறார். குழந்தைகளை நன்கு படிக்க வைத்ததோடு வீடும் வாங்கி விடுகிறார். பிற்காலத்தில் தன் குழந்தைகளும் கணவனும் இவ்வளவு சிக்கனமாக இருக்க வேண்டிய அவ...