Posts

Showing posts from December, 2024

நரிப்பல் - நூல் அறிமுகம்.

Image
நூல்: நரிப்பல். ஆசிரியர்: வெ. இறையன்பு. நியு செஞ்சுரி புக் ஹவுஸ். முதல் பதிப்பு: 2009. நூல் அறிமுகம்: நூலகர் சி. சரவணன். இந்த நூலில் வே. இறையன்பு எழுதியுள்ள 15 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் 5, 6 பக்கங்கள் உள்ளன. பெரும்பாலான கதைகள், இவருடைய வாழ்க்கையில், தான் கண்டு களித்த, வாழ்க்கையில் நடைபெற்ற, சம்பவங்களை அடிப்படையாக எழுதியுள்ளார். ‘விசுவாசிகள்’ என்னும் சிறுகதையில் தான் உயர் அதிகாரியாக இருந்தபோது ஆக்கிரமிப்புகளை வெளியேற்றுவது தொடர்பான சிக்கல்களுக்கு எப்படி தீர்வு காணப்பட்டது என்பதைப் பற்றி எழுதியுள்ளார். ‘செருப்பு விற்பவர்’ என்னும் சிறுகதையில் செருப்பு விற்பனை செய்யும் தொழிலாளியின் பணி நிலையை குறைத்து மதிப்பிடும் தன் மனைவி திருந்துவது எப்படி என்று விளக்குகிறது.  ‘எல்லாம் அவன் செயல்’ என்னும் சிறுகதையில் குடும்பத் தலைவி சொந்த வீடு வாங்கவும், குழந்தைகளின் படிப்பு முன்னேற்றத்திற்காகவும் சிக்கனமாக இருந்து குடும்பம் நடத்துகிறார். குழந்தைகளை நன்கு படிக்க வைத்ததோடு வீடும் வாங்கி விடுகிறார். பிற்காலத்தில் தன் குழந்தைகளும் கணவனும் இவ்வளவு சிக்கனமாக இருக்க வேண்டிய அவ...

தீராப்பெருவெளி - நூல் அறிமுகம்.

Image
தீராப்பெருவெளி  (கவிதை தொகுப்பு) த. பொன்னரசன் மகிழினி பதிப்பகம்  90951 67007 口 நூல் அறிமுகம்: இ.தங்கமணி. உனக்கான காத்திருப்பில் வனாந்திரப் பெருமழையில் முழுவதும் நனைந்துவிட்டேன் ஆங்கே தலைதுவட்ட தேவையோர் வண்ணத்துப்பூச்சி... 口 மிச்சமற்று எரித்துவிடு சகியே நம் மீகாமம் சாகட்டும் 口 நடுநிசியில் நீரிறைக்கும் சப்தம் விழிகளில் தொங்கும் நிறைகுடங்களில் தளும்பும் மனம்... 口 உனக்கும் எனக்குமான ஆயத்தொலைவு -  ஒரு கற்பனை நகர்தலுடன் சுழியமாகிறது... 口 என்னைத் திறப்பதற்கான கடவுச்சொல்  என்னில் வேர்களாய் வியாபித்திருக்கும் நீயேயறிவாய் அந்த வேர்ச்சொல் உன் பெயர்ச்சொல் என்றறிய  ஏனிந்த தாமதம்... 口 கையை விட்டு நழுவிய  கண்ணாடிச் சில்லுகளிலிருந்து பிறப்பெடுக்கும் எனக்கான பிம்பத்தில் ஓராயிரம் முறை உன்னையே குவிக்கிறது என் விழி... 口 வாழ்வின் எந்த விசையும் என்னை ஈர்த்துவிடவில்லை... எனினும் இவ்வாழ்வு தட்டுப்படுமென தடவுகிறதென் கைகள்.. 口 திசை வேறு  பயணம் ஒன்று  மனதிற்கு  மைல்கற்களில்லை... 口 பட்டால் தெரியும் என்பது பட்டுப்போன பின்னே தெரிகிறது... மரணம் மனிதனைத் திருத்த...

நிறை குளம் - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம். நூல் தலைப்பு: நிறைகுளம் - நாவல் நூலாசிரியர்: பெ.மகேந்திரன்  மின்னங்காடி பதிப்பகம்  78240 49160 நூல் அறிமுகம்: இ. தங்கமணி. பேய்ந்து விளையுது மலையாள பூமி  பாய்ந்து விளையுது தஞ்சாவூர் பூமி  காய்ந்து விளையுது கரிசல் பூமி. நான் சிறுவனாக இருக்கும்போது பொடிமட்டை என்ற பெரியவர் ஊரில் இருந்தார். அவர் இயற்பெயர் யாருக்கும் தெரியாது ‌. நல்ல பெரும்பாடி ஆள். எப்போதும் வெள்ளை வேட்டி சட்டையில் இருப்பார். பாக்கெட் நிறைய காகிதங்களும் ஒரு முரட்டு பேனாவும்.  கையில் காபிதூள் நிறத்தில் ஒரு தோல்பையும் அவரது அடையாளம். நான் இல்லாவிட்டால் மொரப்பூருக்கு ரயில் வந்திருக்காது, நான் சொல்லி தான் அரூர் சர்க்கரை ஆலை வந்தது என்பார். வாணியாறு அணை கட்ட மனு எழுதி இருக்கிறேன் என்பார். அன்றாடம் மனு எழுதுவதே அவரது வேலை.  கரிசல்காடு படைப்பாளிகள் விளையும் மண். அம்மக்களின் கனவுகளை, எதிர்பார்ப்புகளை காலந்தோறும் படைப்புகளாக எழுதி வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் நிறைகுளம் கிராமம். கரிசல் மண்ணின் சம்சாரிகள் வானம் பார்த்த பூமியில் நம்பிக்கையை மட்டுமே முத...