விடுபட்ட கவிதைகள் - நூல் அறிமுகம்.
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம். நூல்; விடுபட்ட கவிதைகள் நூலாசிரியர்: கவிஞர் கோகுல் காளியப்பன். நூல் அறிமுகம் : கூத்தப்பாடி மா. பழனி. விடுப்பட்ட கவிதைகள் என்ற தலைப்பை படித்த உடனே இவர் ஏற்கனவே கவிதை நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கின்றவர் என்ற புரிதலை புத்தகத்தின் தலைப்பு நமக்கு உணர்த்துகிறது. ஏற்கனவே இவர் எழுதி வெளியிட்ட இரண்டு படைப்புகளின் புத்தகங்களில் இடம்பெறாமல் போன தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான கவிதைகளை "விடுப்பட்ட கவிதைகள்"- என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளிவருவது மிகப் பொருத்தமானதாகும். கவிஞர் கோகுல் காளியப்பன் அவர்களை பொறுத்த வரை எந்த ஒரு பணியையும் மிகவும் நேர்த்தியாகவும் சரியாகவும் செய்து முடிக்கும் அற்புதமான ஆற்றல் வாய்ந்த கவிஞர். தருமபுரி மாவட்டத் தமிழ்க் கவிஞர் மன்றத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் தவறாமல் கலந்து கொண்டு செயலாற்றி வருபவர். அத்தோடு மட்டுமல்லாமல் மன்றத்தின் அனைத்து விழாக்களுக்கான அழைப்பிதழ், நூல் திறனாய்வுக்கான அழைப்பிதழ் என அழகாக வடிவமைத்துக் கொடுத்துவருபவர். கவிஞர் கோகுல் காளியப்பனின் விடுபட்ட கவிதைகள் எனும் நூலில்...