Posts

Showing posts from January, 2025

கற்பது உலகளவு - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை நூல் அறிமுகம். நூல்: கற்பது உலகளவு  கல்வியாளர் தா.நெடுஞ்செழியன் விகடன் பிரசுரம். நூல் அறிமுகம்: இ. தங்கமணி . --------+++++++------++------- கல்விதான் சமூகத்துக்கு வேர். ஒரு தேசம் கல்வியை எவ்வாறு புரிந்து கொள்கிறது, அடுத்த தலைமுறைக்கு எப்படி கல்வியை எடுத்து செல்கிறது என்பதில்தான் அத்தேசத்தின் வளர்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும் அடங்கி இருக்கிறது. கல்வி என்பது ஓர் இனிமையான பயணம். ஒரு குழந்தை பிறந்ததும் எப்படி இயல்பாக மொழியை கற்றுக் கொள்கிறதோ அப்படி ஒரு நிகழ்வுதான் கல்வியும்.  இந்தியாவைப் பொறுத்தவரை கல்வி அறிவு பெற்று மனிதவளம் மிகுந்திருப்பது தமிழகத்தில்தான். கல்வியை முறைப்படுத்தி தகுந்த தரத்தில் வழங்கினால் தமிழகம் உலகத்தை வழிநடத்தும் வல்லமை பெறும். புதிய தொழில்நுட்பங்கள் வரவர அதற்கு ஏற்ப திட்டங்களையும் கற்பித்தல் முறைகளையும் உருவாக்க வேண்டும். மாணவர்கள் உலகளாவிய வாய்ப்புகளுக்கு எப்படி எல்லாம் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். பொருத்தமான கல்வியை எவ்வாறு தேர்வு செய்வது என்றெல்லாம் விரிவாக பேசுகிறது இந்நூல்.  நூலாசிரியர் தா.நெடுஞ்செழியன் ...

நெஞ்சமே அஞ்சாதே நீ - நூல் அறிமுகம்.

Image
நூல் தலைப்பு: நெஞ்சமே அஞ்சாதே நீ  நூலாசிரியர்:   டாக்டர் எம் .எஸ்.உதயமூர்த்தி பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்  விலை :80 ரூபாய் நூல் ஆய்வாளர்: ஆய்வியல் நிறைஞர்  மா. செந்தில்குமார், ஆசிரியர் "அஞ்சி அஞ்சி வாழ்வார், இவர் அஞ்சாத பொருள் இல்லை. இந்த அவனியிலே!" என்று பாரதி நம்மை சாடினார் . அச்சமில்லை! அச்சமில்லை! என்றும் முழங்கினார். ஆம், ஒரு குளத்தில் கால் நனைக்கவும், புதியதாக தேர்வு எழுதவும், பொதுவாக எந்த செயல் செய்யவும், நமக்கு தயக்கம் இருக்கத்தான் செய்கிறது . நீங்கள் எதற்கெடுத்தாலும் ஒருவரிடம் மன்னிப்பு கேட்பவரா? ஆம் எனில், நீங்கள் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும். ஏனென்றால், நூலின் ஆசிரியர் டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி மன்னிப்பு கேட்காதீர்கள்; திடமாக இருங்கள் என்று நம்மை திடப்படுத்துவார். நம்பிக்கை ஏற்படுத்துவார். நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆளுமையை இதில் கூறுகிறார். எண்ணற்ற கடவுள் சிலைகள் எதற்கு? என்ற வினாவை நம்மிடம் கேட்டுவிட்டு, அவரே மாரியம்மன் முதல் சனிபகவான் வரை உள்ள சிலை கூறும் மனம் சார்ந்த கருத்துக்களை நமக்கு பகிர்ந்து அளிக்கிறார்....

வீரான்குட்டி கவிதைகள் - நூல் அறிமுகம்.

Image
வீரான்குட்டி கவிதைகள்   மலையாளத்திலிருந்து தமிழில்: சுஜா வெளியீடு: தன்னறம்நூல்வெளி  9843870059 நூல் அறிமுகம்: இ. தங்கமணி . கேள் : கல்லிடம் கேள்  எவ்வளவு காத்திருந்து ரத்தினமாகியதென நீர்த்துளியிடம் விசாரி  எத்தனை காலக் காத்திருப்பு முத்தாவதற்கென  உதடுகள் இருந்திருந்தால்  அவை சொல்லியிருக்கும்  அன்புடன் ஒரு கை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் என்று. * குறைந்து குறைந்து காணும் முன்பு  எத்தனை பெரியவராய் இருந்தோம் பரஸ்பரம் நாம்! கண்டுகழித்ததும் சிறிதானோம்  பேசத் தொடங்கியபோது அற்பமானோம் இனி ஒன்றாக நடக்கத் தொடங்கினால் குறைந்து குறைந்து  இருக்கிறோம் என்றே  சொல்ல முடியாத அளவுக்கு  முழுதுமாய்த் தீர்ந்துவிடுவோமோ  நாம் ஒருவருக்கு ஒருவர்? கடவுள் காணக் கிடைக்காதது சாலவும் நன்றல்லவா? * ரூமிக்கு காயங்கள் பட்டாலென்ன  உதடுகளுடன் எப்போதும் வாசிக்க முடிந்ததல்லவா? புல்லாங்குழல் பாடுகிறது. * சொல் சொல் இரண்டுபேர்  காதலிக்கத் தொடங்கும்போது அவர்களை மட்டுமாக்கி  சுற்றியுள்ள உலகம்  சட்டென்று எங்கே போய்த் தொலைகிற...

ஆங்கிலம் (குறுநாவல்) - நூல் அறிமுகம்.

Image
நூல் ஆசிரியர்: சிவசக்திவேல் நூல் அறிமுகம்: நூலகர் சி சரவணன் . அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள், உயர் கல்வி பயிலும் போது, ஆங்கில மொழியை சரியாக படிக்க முடியாமல் படும் தவிப்பு, அதனால் அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், வேதனைகள் - இந்த நூல் விவரிப்பதோடு அதற்கு ஒரு தீர்வும் சொல்கிறது.  இந்தக் கதையில் வறுமையில் இருக்கும் கிராம குடும்பத்திலிருந்து ஒரு மாணவன் கோவை அரசு பொறியியல் கல்லூரியில் சேருகிறான். அந்தக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்து வந்தவர்கள். இவர் மட்டுமே தமிழ் வழியில் பள்ளியில் படித்ததால் ஆங்கில மொழியை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் கஷ்டப்படுகிறார். பிறகு, மனப்பாடம் செய்தாவது தேர்ச்சி பெற வேண்டும் எனும் நோக்கோடு பாடங்களை மனப்பாடம் செய்து தேர்ச்சி பெற்று வருகிறார். இவருடைய ஆங்கில உச்சரிப்புகள் கேலிக்குரியதாக இருப்பதாக சக மாணவர்கள் சொல்வதால், மிகுந்த வேதனை அடைகிறார். வகுப்பிலும், குழு கூட்டங்களிலும் ஆங்கிலம் சரியாக பேச முடியாததால் தற்கொலைக்கு போகும் அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகிறார். கல்லூரிக்கு வந்து, ...